Monday, January 2, 2012

எல்லோருக்குமாக ஒரு சொல்



ஒரு கண்ணாடியைப் போலதான் என்வாழ்க்கை.நடப்பவை எதற்கும்  காரணகாரியங்கள் எதுவும் என் கைகளில் இல்லை.என் முன்னே சிலநேரம் தேவதைகளும் தன்முகம் காட்டி போகிறது.சிலநேரம் கொடிய பேய்களும் தன் அகோரபற்கள் வெளித்தெரிய என்னிடம் வருகிறார்கள்.எதையும் நான் வெறுப்பதில்லை.

ஒரு குடிகாரனைப் பார்ப்பதுபோல எல்லோரும் என்னை முகம்சுளிக்கிறார்கள்.என் இயல்புகளிலிருந்து என்னால் வெளியேறி வரமுடிவதில்லை.இந்த சமூகம் என்னை ஒரு கருங்கல்லை போல கெட்டிப்படுத்தி வைக்கவே ஆசைபடுகிறது.ஒரு பறவையின் சிறகாய் வாழத்துடிக்கும் என்மனவெளியை சூறாவளி சொற்கள் கொண்டு அலைகழிக்க ஆசைபடுவதேன்.

கடேசிகடைசியாய் எல்லோருக்குமாக ஒரு சொல்

உங்கள் பாவங்களை சுமக்கும்
ஒரு தேவதை என்னிடம் இருக்கிறாள்
உங்கள் வேதனை மிகுந்த காயங்கள் ஆற்ற
ஒரு அற்புதம் என்னிடம் இருக்கிறது

அது அன்பு
அன்பு மட்டுமே
அன்பைத் தவிர வேறோன்றுமில்லை.





3 comments:

Philosophy Prabhakaran said...

நன்று... தொடருங்கள்...

Philosophy Prabhakaran said...

word verification-ஐ நீக்கினால் உங்களை பாராட்ட முனைபவர்களுக்கு ஏதுவாக இருக்கும்...

arivazhagan said...

நன்றி பிலாசபி word verification-ஐ நீக்கிவிட்டேன்