Thursday, April 12, 2012

என் அறை



என் எண்ணங்களை போலவே
எப்பொழுதும் பொருட்கள்
சிதறிக் கிடக்கும்
இந்த அறையை

நான் நேசிக்கிறேன்




பழம் கதைகளில் வரும்
மாயஜால குகைகளில்
பொக்கிஷத்தை
காத்து கிடக்கும்
பூதங்களைப் போல
என் அந்தரங்கங்களை
காத்து கிடக்கும்
இந்த அறையை நேசிக்கிறேன்




அதைவிடவும்
புத்தனுக்கு போதியைப் போலவும்
பித்தனுக்கு தாதியைப் போலவுமிருக்கும்
என் அறையை எப்படி


எப்படி நேசிக்காமலிருப்பது





2 comments:

Anonymous said...

நல்ல உணர்வடா தம்பி!
மயில்வண்ணன்

arivazhagan said...

நன்றி அண்ணா