Wednesday, June 27, 2012

மண்டோவுடன் என் காதல் :







எனக்கு படிப்பதென்றால் மிகவும் பிடிக்கும்.அதிலும் என்னை கவர்ந்து விட்ட கதைகளையும் கவிதைகளையும் திரும்ப திரும்ப வாசிக்கும் பழக்கம் என்னிடம் இருந்து வருகிறது.அப்படிதான் அன்றைய மாலை நேரம்,மண்டோவின் சிறுகதைகளை படித்துக் கொண்டிருந்தேன்.இதுவரை பத்து பதினைந்து முறைக்கு மேல் படித்திருக்கிறேன்.ஒவ்வொரு முறை படிக்கும் போதும் ,தேனுண்ட தேனீக்கள் போல அவரின் எழுத்துகளில் மூழ்கி கிடக்கிறேன். இச்சமூகத்தால் தள்ளிவைக்கப்பட்ட,இழிவுக்குள்ளாகப்பட்ட விலைமாதர்களின் வாழ்க்கை,அதில் எழும் மனச்சிக்கல்,கோபங்கள்,கொண்டாட்டங்கள் என சகலத்தையும் மண்டோ பதிவு செய்து வைத்திருக்கிறான் .மேலும் மதம் எனும் மதயானை மனிதர்களிடையே புகுந்துகொண்டு மனிதத்தை துவம்சம் செய்வதையும்,ஒவ்வொரு கலவரங்கள் மூளும் போதும் சூரையாடப்படுவது கடைகள் மட்டுமல்ல பெண்களின் உடைகளும் தான் என்பதையும் மிகத்தெளிவாக உணர்ந்து வைத்திருக்கிறான்.


                                                                                                  000


No comments: