Monday, July 2, 2012



               "சொற்கள் சும்மாயிருப்பதில்லை
                அவை விசையூக்கம் கொண்டவை"
                  
                                                 -அழகியபெரியவன்.



நான் என்னவாக வேண்டும் இந்தக் கேள்வி "ஐந்தாம்வகுப்பு மாணவனான என்னிடம் கேட்கப்பட்டது.என்னுடைய பதிலோ நான் வக்கீலாவேன் என்றேன்.அந்த வயதில் எனக்கு வக்கீலாகும் ஆசையிருந்தது.அடுத்து  நான் ஓவியன் ஆக ஆசைப்பட்டேன் வண்ணங்களின் மேல் ஆசையை கூட்டியது என் எட்டாம் வகுப்பு.(பிள்ளையாரை வரைந்து வீட்டில் பிரேம் போட்டுவைத்தது இன்னும் ஞாபகமிருக்கிறது.)பிறகு பக்கத்து வீட்டு அண்ணன் சென்னையில் சினிமா இயக்குனர் ஆக பெரும் முயற்சி செய்துகொண்டிருந்தார்.அவரிடம் பழகும் வாய்ப்பால் கவிதை எழுத கற்றுக் கொண்டேன்.இப்படி வளர வளர என் ஆசையின் பட்டியலும் வளர்ந்துக் கொண்டிருந்தது.குடுமபத்தின் வறுமை காரணமாக என்னை கல்லூரியில் சேர்க்கமாட்டேன் என்றார் அப்பா.நான் அடம்பிடித்து கல்லூரியில் சேர்ந்தேன்.என் கல்லூரி வாழ்க்கை மிகவும்கொடுமையானதாகஇருந்தது.உணவு ,உடை,உறைவிடம் இம்மூன்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம்.ஆனால் நான் மனிதனாக மதிக்கபடவில்லை.


No comments: