Thursday, August 30, 2012

ரசனை

நேற்றைய  இரவு இளையராஜாவின் "காதலுக்கு கண்கள் இல்லை மானே " என்ற பாடலில் தொடங்கி சின்னதம்பியில் வரும் தூயிலே  ஆடவந்த வானத்து மின்விளக்கே " யில் முடிந்தது. நாளெல்லாம் பிஸியோ பிஸி என்று ஓடிக்கொண்டிருந்தேன்.  இரவு எட்டு மணிக்குமேல்தான் என் பாட்டு உலகம் ஆரம்பமானது.பாட்டும் டான்ஸ்சும் அறையே கலகலப்பு
கூட்டியது.எத்தனையோ படத்தை பார்க்கிறோம் பாடலை கேட்கிறோம் ஆனால் இன்னும் கரகாட்டக்காரன் மாங்குயிலே பூங்குயிலே பாடலை கேட்கையில் மனம் துள்ளி உடல் அசைந்து ஆட்டம் ஆட தொடங்குகிறது.அது இளையராஜாவின் இசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

நீங்களும் ஒருமுறை பாடலைப் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.



No comments: