Wednesday, November 30, 2011

கருத்தப் பெண்


ருத்துவமனை வாசலில்

இன்று காலை
கண்ணீரோடு
நின்றுக் கொண்டிருந்தாள்
கருத்தப் பெண்ணொருத்தி


காரணம் இதுதான்
கையில் திணிக்கப்பட்ட
கட்டணச் சீட்டிற்கு
காசின்றி கெஞ்சியபடி


அடிப்பட்டு கிடக்கும்
அப்பனுக்காய் அழுததைவிட
அறை கட்டணத்துக்காய்
அழுததை பார்க்கையில்
மனதில் மெதுவாய்
எதுவோ ஊர்ந்தது


என்ன செய்வதென்று
புரியாமல் குற்றயுணர்வில் நழுவி
மெல்ல மெல்ல
என் அறைக்கு திரும்பினேன்


என் கால்களுக்குக் கீழே
பிசுபிசுத்த கண்ணீர்
அவளுக்காகவும் இருக்கலாம்
அவளுடையதாகவும் இருக்கலாம்.