Friday, July 22, 2011

நானும் என் எழுத்தும்







இந்த பூமிப்பந்தில்
எல்லா உயிர்களையும் போலதான்
என் இருத்தலும் இயக்கமும்




மண் கிழித்து வரும்
ஒரு புல்லினை போலதான்
என் எழுத்தும்


இதில் அற்பம் எது
அற்புதம் எது
எல்லாம் ஒன்றுதான்


நான் யாராக இருக்கிறேன்
என்று பார்க்கிறது
இந்த உலகம்
நான் நானாகவே இருக்கிறேன்


உங்கள் அகராதியைக் கொண்டு
அளக்காதீர்கள்
ஏனென்றால் அது
என் வார்த்தைகள்.



Friday, July 1, 2011

நீண்ட கவிதைக்குப் பின் ஒருவரி




கைகோர்த்து
வெகுதூரம் நடந்தோம்
நம்மிருவரிடையே
நடைபழகியது காதல்.






நாளை சந்திப்பு
பூங்காவில் வேண்டாம்
கண்டுபிடிக்க
கடினமாக இருக்கிறது
பூக்களோடு கலந்துவிட்ட
உன்னை.


சந்தைகள்
நிறைந்த
உன் தெருவில்
சங்கீதம் கேட்கிறேன் நான்.




                           -தொடரும்.